கண்டுகொண்டேன் என் ராமானுஜனை
இந்த சமயத்தில்தான் கலைஞர் தொலைக்காட்சியில் ராமானுஜர் தொடர் வந்து கொண்டிருந்தது. முதலில் சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தவள் அதன் பின் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்க்க ஆரம்பித்தேன். டிவியிலும் பார்த்துவிட்டு யூ டுப்பிலும் பார்ப்பேன். ராமானுஜர் சந்நிதிக்கு செல்வதை எனக்கு அமைதியை கொடுத்தது. அரங்கன் கோவிலில் நடந்து போகும்போது இங்குதான் ராமானுஜர் நின்றிருப்பார் இங்குதான் பிரசங்கம் செய்திருப்பார் என்றெல்லாம் நினைத்து கொள்வேன். சயன திருக்கோலத்தில் இருக்கும் அரங்கன் என்னுடன் பேசுவது போலிருக்கும். அரங்கனும் ராமானுஜரும் என் சிந்தனையில் அதிகம் இடம் பெற்றார்கள். ராமானுஜர் பற்றி அதிகம் படிக்க ஆரம்பித்ததால் அந்த தொடரை அதிக ஈடுபாட்டுடன் பார்தததால் யாரிடம் பேசினாலும் அதில் ராமானுஜர் பற்றி எப்படியாவது குறிப்பிட்டு விடுவேன். என்ன ஆயிற்று இவளுக்கு திடீரென்று ரொம்ப ஆன்மிகம் பேசுகிறாள் தத்துவம் பேசுகிறாள் என்று என்னை பற்றி சிலர் கிண்டலடிப்பதும் எனக்கு தெரிந்தது. ஆனால் அதை பற்றி நான் கவலை படவில்லை
ஒரு வருடம் ஸ்ரீரங்கத்தில் இருந்த நான் பிறகு மீண்டும் சென்னைக்கு குடி வந்தேன்..திருவண்ணாமலையில் எனது பகவான் யோகி ராம்சுரத்குமாரை வழிபட சென்றபோது ஆஸ்ரமத்தில் விஜயலக்ஷ்மி அம்மாவுடன் பிரதான் மந்திரில் பகவான் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ராமானுஜர் பற்றி பேச்சு வந்தது. அப்போது அம்மா சரணாகததில் ராமானுஜர் பற்றி எழுத வேண்டும், மூன்று இதழ்களில் தொடர்ந்து கட்டுரை இடம் பெறவேண்டும் , யாராவது தெரியுமா என்று கேட்டார்கள். பகவானே என்னிடம் சொல்வது போயலி ருந்தது உடனே நான் அம்மா, நானே எழுதுகிறேன் என்றேன். அம்மா உடனே சரி என்றார்கள். மூன்று தொடர்களும் எப்படி இடம் பெற வேண்டும் என்று இருவரும் பேசினோம் . சென்னை வந்ததும் அதற்கான பணிகளில் ஈடுபட்டேன்.
ராமானுஜர் பற்றி நான் அறிந்த கொண்டதில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு அதிக பங்கு உண்டு. அவருடைய பிரசங்கங்களை அதிகம் கேட்க ஆரம்பித்தேன். சென்னையில் அவருடைய பிரசங்கம் எங்கு நடந்தாலும் உடனே போய் விடுவேன். ராமானுஜர் பற்றி எழுத அது எனக்கு மிகவும் உதவியது.
எழுத்து எனக்கு புதிதல்ல .30 ஆண்டுகள் பத்திரிகையில் வேலை பார்த்திருக்கிறேன் எவ்வளவோ கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் ராமானுஜர் கட்டுரைகளை நான் சரணாகதத்திற்கு எழுதியது என்னை பரவசப் படுத்தியது. எனது வாழ்க்கையில் பெரும் சோகம் ஏற்பட்டதிலிருந்து நான் எழுதுவதையே நிறுத்தியிருந்தேன் என்னால் எழுத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. எழுத வேண்டும் என்கிற நினைப்பே எனக்கு இல்லாமல் இருந்தது. எனது பத்திரிகை தோழி உமா சக்தி தினமணி டாட் காமிற்கு எழுதுங்கள் என்று சொன்ன போது முயல்கிறேன் என்று சொன்னேனே தவிர எழுதவிலை. ஆனால் ராமாநுஜர் பற்றி எழுத வேண்டும் அதுவும் சரணகதத்தில் என்றதும் எழுதும் ஆர்வம் என்னை மீண்டும் பற்றிக் கொண்டது.
இரண்டு மாத இதழ்களில் கட்டுரை வெளிவந்து விட்டது. அடுத்த மாதம் முன்றாவது கட்டுரை வெளிவரும்.
இதுதான் வெளிவந்த கட்டுரை
இந்த சமயத்தில்தான் கலைஞர் தொலைக்காட்சியில் ராமானுஜர் தொடர் வந்து கொண்டிருந்தது. முதலில் சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தவள் அதன் பின் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்க்க ஆரம்பித்தேன். டிவியிலும் பார்த்துவிட்டு யூ டுப்பிலும் பார்ப்பேன். ராமானுஜர் சந்நிதிக்கு செல்வதை எனக்கு அமைதியை கொடுத்தது. அரங்கன் கோவிலில் நடந்து போகும்போது இங்குதான் ராமானுஜர் நின்றிருப்பார் இங்குதான் பிரசங்கம் செய்திருப்பார் என்றெல்லாம் நினைத்து கொள்வேன். சயன திருக்கோலத்தில் இருக்கும் அரங்கன் என்னுடன் பேசுவது போலிருக்கும். அரங்கனும் ராமானுஜரும் என் சிந்தனையில் அதிகம் இடம் பெற்றார்கள். ராமானுஜர் பற்றி அதிகம் படிக்க ஆரம்பித்ததால் அந்த தொடரை அதிக ஈடுபாட்டுடன் பார்தததால் யாரிடம் பேசினாலும் அதில் ராமானுஜர் பற்றி எப்படியாவது குறிப்பிட்டு விடுவேன். என்ன ஆயிற்று இவளுக்கு திடீரென்று ரொம்ப ஆன்மிகம் பேசுகிறாள் தத்துவம் பேசுகிறாள் என்று என்னை பற்றி சிலர் கிண்டலடிப்பதும் எனக்கு தெரிந்தது. ஆனால் அதை பற்றி நான் கவலை படவில்லை
ஒரு வருடம் ஸ்ரீரங்கத்தில் இருந்த நான் பிறகு மீண்டும் சென்னைக்கு குடி வந்தேன்..திருவண்ணாமலையில் எனது பகவான் யோகி ராம்சுரத்குமாரை வழிபட சென்றபோது ஆஸ்ரமத்தில் விஜயலக்ஷ்மி அம்மாவுடன் பிரதான் மந்திரில் பகவான் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ராமானுஜர் பற்றி பேச்சு வந்தது. அப்போது அம்மா சரணாகததில் ராமானுஜர் பற்றி எழுத வேண்டும், மூன்று இதழ்களில் தொடர்ந்து கட்டுரை இடம் பெறவேண்டும் , யாராவது தெரியுமா என்று கேட்டார்கள். பகவானே என்னிடம் சொல்வது போயலி ருந்தது உடனே நான் அம்மா, நானே எழுதுகிறேன் என்றேன். அம்மா உடனே சரி என்றார்கள். மூன்று தொடர்களும் எப்படி இடம் பெற வேண்டும் என்று இருவரும் பேசினோம் . சென்னை வந்ததும் அதற்கான பணிகளில் ஈடுபட்டேன்.
ராமானுஜர் பற்றி நான் அறிந்த கொண்டதில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு அதிக பங்கு உண்டு. அவருடைய பிரசங்கங்களை அதிகம் கேட்க ஆரம்பித்தேன். சென்னையில் அவருடைய பிரசங்கம் எங்கு நடந்தாலும் உடனே போய் விடுவேன். ராமானுஜர் பற்றி எழுத அது எனக்கு மிகவும் உதவியது.
எழுத்து எனக்கு புதிதல்ல .30 ஆண்டுகள் பத்திரிகையில் வேலை பார்த்திருக்கிறேன் எவ்வளவோ கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் ராமானுஜர் கட்டுரைகளை நான் சரணாகதத்திற்கு எழுதியது என்னை பரவசப் படுத்தியது. எனது வாழ்க்கையில் பெரும் சோகம் ஏற்பட்டதிலிருந்து நான் எழுதுவதையே நிறுத்தியிருந்தேன் என்னால் எழுத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. எழுத வேண்டும் என்கிற நினைப்பே எனக்கு இல்லாமல் இருந்தது. எனது பத்திரிகை தோழி உமா சக்தி தினமணி டாட் காமிற்கு எழுதுங்கள் என்று சொன்ன போது முயல்கிறேன் என்று சொன்னேனே தவிர எழுதவிலை. ஆனால் ராமாநுஜர் பற்றி எழுத வேண்டும் அதுவும் சரணகதத்தில் என்றதும் எழுதும் ஆர்வம் என்னை மீண்டும் பற்றிக் கொண்டது.
இரண்டு மாத இதழ்களில் கட்டுரை வெளிவந்து விட்டது. அடுத்த மாதம் முன்றாவது கட்டுரை வெளிவரும்.
இதுதான் வெளிவந்த கட்டுரை
No comments:
Post a Comment