Total Pageviews

Tuesday, 20 June 2017

இந்தியர்கள் என்றாலே பெருமைதான் !

இன்று ஆட்டோவா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டாண்டு பட்ட மேற்படிப்பை ஒன்றரை ஆண்டிலேயே ( இங்குள்ள பல்கலைக்கழகங்களில் இந்த மாதிரி முடிக்க முடியும்)  என் பெண் முடித்து விட்டாள் . அதாவத ஒரு செமஸ்டர் பேப்பர்களை முந்தைய செமஸ்டரியியே கூடுதலாக எடுத்து படித்து தேர்வு எழுதலாம். அதனால் கடந்த ஆண்டே அவள்   முடித்து .பட்டம் பெற்று விட்டாள் . ஆனால் அவள் பட்டம் பெறுவதை பார்க்க என்னால் வர இயலவில்லை. இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவளது தோழிகள் பட்டம் பெற்றார்கள். விழாவுக்கு வரவேண்டும் என்று அவளது தோழிகள் நுழைவு சீட்டு கொண்டு வந்து கொடுத்து போயிருந்தார்கள். அதனால் நானும் என்  பெண்ணும்  சென்றோம். .        கடந்த ஆண்டு என் பெண் பட்டம் வாங்கியதை பார்க்க முடியாமல் போய்விட்டது என்கிற மனக் குறை எனக்கு இருந்தது. இன்று சென்ற போது கடந்த ஆண்டு விழா எங்கெல்லாம் நடந்தது என்று என்  பெண் எனக்கு ஒவ்வொரு இடங்களையும் காட்டி விளக்கினாள் . இந்திய மாணவர்களுக்கு பெரும்பாலும் அவர்களது பெற்றோர்கள் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருதார்கள் என்பது தெரிந்தது.  இன்று  Master of engineering , master of computer science, மற்றும் என்ஜினீரிங்கில் ஆராய்ச்சி பட்ட படிப்பு    மு டித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ஒரு நாளைக்கு நான்கைந்து துறைகளுக்கு என்று பட்டமளிப்பு விழா நான்கு நாட்களுக்கு மேல் நடக்கிறது. இன்றைய பட்டமளிப்பு விழாவில் அதிக இந்திய மாணவ ,மாணவியர்கள் இருந்தது தெரிந்தது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம். அடுத்து ஆந்திர மாணவர்கள். தமிழ் ஒரு 10 பேர் இருப்பார்கள். வந்திருந்த பெற்றோர்களில் சிலர் புடவை அணிந்து இருந்ததை வைத்து அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்ததது.
  என்  பெண் அவளது தோழிகளுக்கு என்னை அறிமுகப் படுத்தி வைத்தாள் . அவர்களது பெற்றோர்களும் அறிமுகமாக ,கை  குலுக்கல்கள், வாழ்த்துக்கள் புகைப்படங்கள் என்று அரங்கத்திற்கு வெளியே ஒரே கலகலப்பு. அவளுடன்  ஒன்றாக படித்த மாணவர்கள் என்னை அறிமுகப் படுத்தியதும் கை குலுக்கியதும் தடக் தடக்கென்று குனிந்து  என் காலைத்தொட்டு வணங்கியது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது . வயதில் பெரியவர்களை சிறியவர்கள் காலை தொட்டு வணங்கி ஆசி பெறுவது சகஜம்தான். ஆனால் இந்த மாதிரி பலரும் கூடியிருக்கும் இடத்தில்கல்வி நிறுவனத்தில்  தயக்கமின்றி அவர்கள் மரியாதை காட்டியது , வெளிநாட்டில் படித்தாலும் நமது கலாச்சாரத்தை  அவர்கள் மறக்கவில்லை என்பதை காட்டியது. எனக்கு நம் இந்தியாவை நினைத்து பெருமையாக இருந்தது. என் பெண்ணின் தோழிகளில் ஒருத்தி  நான் எனது பெண்ணின் பட்டமளிப்பு விழாவிற்கு வர முடியாததால் அங்கி அணிந்து அவளை நான் பார்க்கவில்லையே என்று தான் அணிந்திருந்த அங்கியை என்  பெண்ணுக்கு அணிவித்து "ஆன்டி இப்படித்தான் போன வருடம் அக்ஷ்யா அணிந்து பட்டம் பெற்றாள்  என்று சொல்லி எங்கள் இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுத்து தள்ளி விட்டார்கள்.பின் சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு நாங்கள் கிளம்பினோம்.
  லிப்ட்டில் நாங்கள் உள்ளே நுழைந்தபோது பல்கலைக்கழக டீனும் அங்கிருந்தார். .ஹய்  என்றவர் , என்னை பார்த்து நீங்கள் இவளது அம்மாவா என்றார். ஆம் என்றேன். எப்பிடி இருந்தது  விழா /என்று கேட்டவர் நீ எந்த துறையில் பட்டம் பெற்றாய் என்று ஏன் மகளிடம்  கேட்டார்.. "அவள் நான் சென்ற ஆண்டே பட்டம் பெற்று விட்டேன், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்றாள் . அப்படியா, இப்போது வேலை பார்க்கிறாயா, குட்  என்றவர், என்னை பார்த்து நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா என்று கேட்டார். ஆம் என்றேன். எந்த கூட்டத்திலும் நம்மை எளிதில் கண்டு பிடித்துவிட முடியும் !!!!
  

No comments:

Post a Comment