ஸ்ரீ ராமானுஜர் பற்றி சரணாகதம் ஜூலை மாத இதழில் வெளிவநத எனது கட்டுரை(4 வதும் இறுதி பகுதியும் )


சரணாகதம் ---- கட்டுரை
ராமானுஜர் 4வது பகுதி
வாழி ராமானுஜர் வாழி எதிராசர்
எழுதியவர்: பானுமதி கிருஷ்ணஸ்வாமி சென்னை
ராமனுஜர்ஒன்பது நூல்கள் எழுதினார். அவை நவரத்தினங்கள் என்று அறியப்படுகின்றன. ஸ்ரீ பாஷ்யம் , வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதாந்த சங்க்ரஹம் , கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம் ஸ்ரீவைகுண்ட கத்யம், நித்ய க்ரந்தம் ஆகியவை அவை. இதில் ஸ்ரீ பாஷ்யம் தான் அவர் ஆளவந்தாருக்கு செய்து கொடுத்த முதல் சத்தியம். அதாவது பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதுவதாக செய்து கொடுத்த உறுதி. அவர் ஸ்ரீ பாஷ்யம் எழுதுவதற்கு முன்பாக போதாயனர் விருத்தி நூலை படித்தால் நல்லது என்று சொல்லப்படவே அந்த நூலின் ஒரே ஒரு பிரதி மட்டுமே இருக்கும் காஷ்மீரத்து புத்தகசாலைக்கு செல்ல முடிவு செய்தார். அவருடன் அவரது சீடரான கூரத்தாழ்வான் சென்றார். காஷ்மீரத்தில் அங்கு இருந்த அரசரை பார்த்து அவரிடம் அனுமதி பெற்று போதாயனர் விருத்தியை அவர் வாங்கி கொண்டு வரும்போது அந்த அரசரின் சபையில் இருந்த அறிஞர்கள் அவரை துரத்தி வந்து வழியில் மடக்கி அந்த புத்தகத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் நினைவாற்றலுக்கு பெயர் பெற்ற கூரத்தாழ்வான் அந்த புத்தகத்தை தான் மனனம் செய்து விட்டதாக சொன்னார்.
பின்னர் ஸ்ரீரங்கம் திரும்பி கூரத்தாழ்வானின் நினைவாற்றல் உதவியுடன் பிரம்ம சூத்திரத்திற்கு அவர் உரை எழுதினார். பிரம்ம சூத்திரத்திற்கு பலர் விளக்க உரை எழுதியிருந்த போதிலும் எழுதியிருந்த போதிலும் ராமானுஜரின் பாஷ்யமே சிறப்பானது என்று கருதப் பட்டு அது ஸ்ரீ பாஷ்யம் என்று போற்றப்பட்டது. அதிலிருந்து ஸ்ரீராமானுஜர் ஸ்ரீ பாஷ்யக்காரர் என்கிற திருநாமத்தை பெற்றார்.
விஷிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தங்களை பரப்ப அவர் இந்தியா முழுவதும் திக்விஜயம் மேற்கொண்டார். வாதபோர்களில் கலந்து கொண்டு தனது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தங்களை பிரபலப்படுத்தினார். இவ்வாறு ஸ்ரீவைஷ்ணவத்தை ராமானுஜர் பரப்பி வந்தது அப்போது தஞ்சையை ஆண்ட சோழ மன்னனுக்கு பிடிக்கவில்லை. அந்த சோழ மன்னன் சைவ சமயத்தை சார்ந்தவர். மன்னனால் ராமானுஜருக்கு ஆபத்து என்பதை புரிந்து கொண்ட அவரது சீடர்கள் அவர் சிறிது காலம் ஸ்ரீரங்கத்தை விட்டு தலை மறைவாக இறுப்பது நல்லது என்று நினைத்தார்கள். அப்போதுதான் ராமானுஜர் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மேலக்கோட்டை எனப்படும் திருநாராயணபுரத்திற்கு வந்து சேர்ந்தார். மேலக்கோட்டையில் அவர் 12 ஆண்டுகள் இருந்தார்.
விஷிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தங்களை பரப்ப அவர் இந்தியா முழுவதும் திக்விஜயம் மேற்கொண்டார். வாதபோர்களில் கலந்து கொண்டு தனது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தங்களை பிரபலப்படுத்தினார். இவ்வாறு ஸ்ரீவைஷ்ணவத்தை ராமானுஜர் பரப்பி வந்தது அப்போது தஞ்சையை ஆண்ட சோழ மன்னனுக்கு பிடிக்கவில்லை. அந்த சோழ மன்னன் சைவ சமயத்தை சார்ந்தவர். மன்னனால் ராமானுஜருக்கு ஆபத்து என்பதை புரிந்து கொண்ட அவரது சீடர்கள் அவர் சிறிது காலம் ஸ்ரீரங்கத்தை விட்டு தலை மறைவாக இறுப்பது நல்லது என்று நினைத்தார்கள். அப்போதுதான் ராமானுஜர் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மேலக்கோட்டை எனப்படும் திருநாராயணபுரத்திற்கு வந்து சேர்ந்தார். மேலக்கோட்டையில் அவர் 12 ஆண்டுகள் இருந்தார்.
ராமானுஜருடன் அவரது சீடர்கள் பலரும் மேல்கோட்டைக்கு சென்றார்கள். திருநாராயணபுர கோயிலில் தனது சீடர்களுடன் சேர்ந்து பல பணிகளை ராமானுஜர் செய்தார். ஊர் மக்களுக்கு ராமானுஜரை ரொம்பவும் பிடித்து விட்டது. கோயிலின் உத்சவ மூர்த்தி ராமப்ரியன் டில்லி பாதுஷா படையெடுப்பின்போது கொள்ளையடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார் என்பதை கேள்விப்பட்ட ராமானுஜர் ராமப்பிரியனை மீட்க டில்லிக்கு சென்றார். அங்கு மன்னன் விக்ரகம் தனது பெண்னிடம் உள்ளது என்றும் அவள் கொடுத்தால் வாங்கி செல்லும்படியும் கூறிவிட்டார். இளவரசியும் இதே பதிலை சொல்ல ராமானுஜர் விக்கிரகத்தை பார்த்து 'செல்ல பிள்ளை வாராய்' என்று அழைக்க வீக்கம் ராமானுஜரின் மடியில் ஓடி வந்து அமர்ந்து கொண்டது . பின்னர் அதை எடுத்துக்கொண்டு ராமானுஜர் மேல்கோட்டைக்கு வந்தார். அன்றிலிருந்து திருநாராயணபுரத்து உத்சவர் செல்லப்பிள்ளை என்று அறியப்பட்டார் என்கிறது வைஷ்ணவ வரலாறு.
12 ஆண்டுகள் ராமானுஜர் மேலக்கோட்டையில் இருந்தார். ஸ்ரீரங்கத்தில் சோழ மன்னன் இறந்து போய் அவரது மகன் பட்டத்துக்கு வந்து விட்டார் அவரால் வைஷ்ணவத்திற்கு ஆபத்து ஏதும் இல்லை என்கிற தகவல்களை ராமானுஜருக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்த அவரது சீடர்கள் அனுப்பினார்கள் . உடனே ராமானுஜர் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். 12 ஆண்டுகள் ராமானுஜருடன் இருந்து விட்ட மேலக்கோட்டை மக்கள் அவர் ஸ்ரீரங்கம் திரும்புவதை கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தார்கள். தங்களால் அவரது பிரிவை தாங்க முடியாது என்றார்கள் . அவரது திருமேனியை விக்ரக வடிவில் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களது விருப்பப் படியே ராமானுஜர் தனது விக்ரகம் ஒன்றை செய்ய சொன்னார். அது இன்றும் திருநாராயணபுரத்தில் 'தமர் உகந்த திருமேனி " என்று சொல்லப்படுகிறது . தமர் என்றால் பக்தர்கள் என்று பொருள். பக்தர்களுக்கான திருமேனி என்று பொருள்.
ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் கோயிலின் நிர்வத்தை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டார்.தினசரி உபன்யாசங்கள் செய்தார். அவரது பக்தர்கள் கூட்டம் அதிகமானது. மக்கள் அவர் காட்டிய இறை பணியை மேற்கொள்ள விரும்பினார்கள் . ராமானுஜருக்கு வயதாகி கொண்டே வந்தது. ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தை பரப்புவதற்கு 74 ஆச்சார்ய மையங்களை ஏற்படுத்தினார். மன்னர்கள் செல்வந்தர்களும் அவரை பின்பற்றினார்கள்.
அவர் பிறந்த ஊர் ஸ்ரீபெரும்புதூர் என்றாலும் புகுந்த வீடான ஸ்ரீரங்கத்திலேயே ராமானுஜர் இருந்துவிட்டார் என்று ஸ்ரீபெரும்புதூர் பக்தர்கள் வருந்தினார்கள். அப்போது அவரது சீடரான முதலியாண்டானின் மகன் கந்தாடை ஆண்டான் ராமானுஜரிடம் வேண்டி வற்புறுத்தி அவரது விக்ரகம் ஒன்றை செய்ய அனுமதி பெற்றார். ராமானுஜர் தனது சக்தி முழுவதையும் அதில் அளிக்கும் வகையில் அந்த விக்ரகத்தை ஆரத் தழுவிக் கொண்டார். ராமானுஜரின் சக்தி அனைத்தும் அந்த விக்கிரகத்தில் ஏறியது. அந்த விக்கிரகம் அந்த ஆண்டு தை மாதம் பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜர் தனது சக்தியை இழந்து நடக்க முடியாமல் தள்ளாட ஆரம்பித்தார். இந்த விக்ரகம் தான் இன்றும் ஸ்ரீபெரும்புதூரில் "தானுகந்த திருமேனி" அதாவது அவரே விரும்பி ஏற்ற திருமேனியாய் இருக்கிறது.
ராமானுஜருக்கு தள்ளாமை அதிகமானது. 120 வயதை அவர் எட்டிவிட்டார். . தனது வாழ்நாள் முடிய போகிறது என்பதை உணர்ந்து கொண்ட ராமானுஜர்அரங்கனிடம் சென்று தனது குற்றங்களை அவர் மன்னிக்க வேண்டும் என்றும் தனது சம்பந்தம் பெற்ற அடியவர்களுக்கு இப்போதும் வருங்காலத்திலும் முக்தி அளிக்க வேண்டும் என்றும் வேண்டினார். அரங்கன் ராமானுஜரின் பெருந்தன்மையை பார்த்து வியந்து போனார். பொதுவாக எவரும் தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் வேண்டுவார்கள் தவிர என்னை சார்ந்தவர்களுக்கும் முக்தி கொடு என்று வேண்டமாட்டார்கள். அதனால் ஆச்சரியமடைந்த நம்பெருமாள் அப்படியே ஆகட்டும் என்றார்.இந்த உலக வாழ்க்கை போதும், அடியேனுக்கு வைகுந்தத்தை அருள வேண்டும் என்று வேண்டினார்.அதனை ஏற்றுக்கொண்ட அரங்கன் இன்னும் 7 நாட்களில் அவர் உலக வாழ்வை நீத்து வைகுந்தம் அடைவார் என்று சொன்னார். மனமகிழ்ந்து ராமானுஜர் உடனே பல உபன்யாசங்கள் நடத்தினார். பல சீரிய கருத்துக்களை சீடர்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியில் தனது 120 வது வயதில் தனது திருமேனியை துறந்து வைகுந்தம் சென்றார். . ராமானுஜருக்கு தன் மீது இருந்த அபிமானத்தையும் பக்தியையும் புரிந்துகொண்ட நம்பெருமாள் ராமானுஜரின் திருமேனி தனக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவரது திருமேனியை கோயில் வசந்த மண்டபத்திலேயே திருப்பள்ளி படுத்த சொன்னார். இன்று அந்த இடத்தில்தான் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் சந்நிதி இருக்கிறது. அவர் திருப்பள்ளி படுத்தப்பட்ட இடத்தில் கந்தாடை ஆண்டான் சந்தனம் குங்குமப்பூ கொண்டு ராமானுஜர் திருமேனியை எழுந்தருள பண்ணினார். அது தத்ரூபமாக ராமானுஜர் மீண்டும் வந்திருப்பது போல் இருப்பதால் "தானான திருமேனி" என்று அது கொண்டாடப் படுகிறது.
ராமானுஜர்தனது வாழ்நாளில் பல அரிய பணிகளை செய்திருக்கிறார். வேதாந்தத்திற்கு விளக்கம் அளிக்கும் 9 நூல்களை எழுதினார். ஆழ்வார்களின் பாசுரங்களை பிரபலப்படுத்தினார். கோயில்களில் சீர்திருத்தங்களை செய்தார். முக்தி அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதி செய்தார். இறைவனின் திருவடிகளை பற்றியவர்கள் தங்களது எதிர்காலம் பற்றி அஞ்ச வேண்டாம் . பகவானுக்கும் அவரது பக்தர்களுக்கும் எப்போதும் கைங்கர்யம் செய்ய வேண்டும், ஆச்சார்யர்களுக்கும் நலிவடைந்தவர்களுக்கும் செய்யும் கைங்கர்யம் இறை பணிக்கு சமமானது என்று எளியோரும் புரிந்து கொள்ளும்படி உபதேசங்கள் செய்தார். 1017 ஆம் ஆண்டு பிறந்த ராமானுஜர் 1137 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் பிறந்து இந்த ஆண்டுடன் 1000 வருடங்கள் ஆகின்றன. 1000 ஆண்டுகள் ஆனாலும் அவரது உபதேசங்களும் தத்துவங்களும் இன்றைக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன. மக்கள் நலனையே அவர் முக்கியமாக கருதினார். சமத்துவத்தின் வடிவமாக அவர் இருந்தார். கடவுள் தனது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை உணர்த்தினார். 1000 ஆண்டு காணும் ராமானுஜரின் வழி நடத்தல் நமது மனித சமூகம் உயர்வடைவதற்கான வழி என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ராமானுஜர் பற்றி நான்கு பகுதிகளாக வந்த இந்த கட்டுரைகளில் ராமானுஜர் பற்றிய பல முக்கிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் அவருடன் சம்பத்தப்பட்ட பலர் பற்றி இடமின்மை காரணமாக எழுத முடியவில்லை. ராமானுஜர் என்கிற பெருங் கடலிலிருந்து சில துளி நீரை மட்டுமே அடியேன் எடுத்து காட்டியிருக்கிறேன்.
வாழி ராமானுஜர் வாழி எதிராசன்
-----------------------------
12 ஆண்டுகள் ராமானுஜர் மேலக்கோட்டையில் இருந்தார். ஸ்ரீரங்கத்தில் சோழ மன்னன் இறந்து போய் அவரது மகன் பட்டத்துக்கு வந்து விட்டார் அவரால் வைஷ்ணவத்திற்கு ஆபத்து ஏதும் இல்லை என்கிற தகவல்களை ராமானுஜருக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்த அவரது சீடர்கள் அனுப்பினார்கள் . உடனே ராமானுஜர் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். 12 ஆண்டுகள் ராமானுஜருடன் இருந்து விட்ட மேலக்கோட்டை மக்கள் அவர் ஸ்ரீரங்கம் திரும்புவதை கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தார்கள். தங்களால் அவரது பிரிவை தாங்க முடியாது என்றார்கள் . அவரது திருமேனியை விக்ரக வடிவில் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களது விருப்பப் படியே ராமானுஜர் தனது விக்ரகம் ஒன்றை செய்ய சொன்னார். அது இன்றும் திருநாராயணபுரத்தில் 'தமர் உகந்த திருமேனி " என்று சொல்லப்படுகிறது . தமர் என்றால் பக்தர்கள் என்று பொருள். பக்தர்களுக்கான திருமேனி என்று பொருள்.
ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் கோயிலின் நிர்வத்தை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டார்.தினசரி உபன்யாசங்கள் செய்தார். அவரது பக்தர்கள் கூட்டம் அதிகமானது. மக்கள் அவர் காட்டிய இறை பணியை மேற்கொள்ள விரும்பினார்கள் . ராமானுஜருக்கு வயதாகி கொண்டே வந்தது. ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தை பரப்புவதற்கு 74 ஆச்சார்ய மையங்களை ஏற்படுத்தினார். மன்னர்கள் செல்வந்தர்களும் அவரை பின்பற்றினார்கள்.
அவர் பிறந்த ஊர் ஸ்ரீபெரும்புதூர் என்றாலும் புகுந்த வீடான ஸ்ரீரங்கத்திலேயே ராமானுஜர் இருந்துவிட்டார் என்று ஸ்ரீபெரும்புதூர் பக்தர்கள் வருந்தினார்கள். அப்போது அவரது சீடரான முதலியாண்டானின் மகன் கந்தாடை ஆண்டான் ராமானுஜரிடம் வேண்டி வற்புறுத்தி அவரது விக்ரகம் ஒன்றை செய்ய அனுமதி பெற்றார். ராமானுஜர் தனது சக்தி முழுவதையும் அதில் அளிக்கும் வகையில் அந்த விக்ரகத்தை ஆரத் தழுவிக் கொண்டார். ராமானுஜரின் சக்தி அனைத்தும் அந்த விக்கிரகத்தில் ஏறியது. அந்த விக்கிரகம் அந்த ஆண்டு தை மாதம் பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜர் தனது சக்தியை இழந்து நடக்க முடியாமல் தள்ளாட ஆரம்பித்தார். இந்த விக்ரகம் தான் இன்றும் ஸ்ரீபெரும்புதூரில் "தானுகந்த திருமேனி" அதாவது அவரே விரும்பி ஏற்ற திருமேனியாய் இருக்கிறது.
ராமானுஜருக்கு தள்ளாமை அதிகமானது. 120 வயதை அவர் எட்டிவிட்டார். . தனது வாழ்நாள் முடிய போகிறது என்பதை உணர்ந்து கொண்ட ராமானுஜர்அரங்கனிடம் சென்று தனது குற்றங்களை அவர் மன்னிக்க வேண்டும் என்றும் தனது சம்பந்தம் பெற்ற அடியவர்களுக்கு இப்போதும் வருங்காலத்திலும் முக்தி அளிக்க வேண்டும் என்றும் வேண்டினார். அரங்கன் ராமானுஜரின் பெருந்தன்மையை பார்த்து வியந்து போனார். பொதுவாக எவரும் தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் வேண்டுவார்கள் தவிர என்னை சார்ந்தவர்களுக்கும் முக்தி கொடு என்று வேண்டமாட்டார்கள். அதனால் ஆச்சரியமடைந்த நம்பெருமாள் அப்படியே ஆகட்டும் என்றார்.இந்த உலக வாழ்க்கை போதும், அடியேனுக்கு வைகுந்தத்தை அருள வேண்டும் என்று வேண்டினார்.அதனை ஏற்றுக்கொண்ட அரங்கன் இன்னும் 7 நாட்களில் அவர் உலக வாழ்வை நீத்து வைகுந்தம் அடைவார் என்று சொன்னார். மனமகிழ்ந்து ராமானுஜர் உடனே பல உபன்யாசங்கள் நடத்தினார். பல சீரிய கருத்துக்களை சீடர்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியில் தனது 120 வது வயதில் தனது திருமேனியை துறந்து வைகுந்தம் சென்றார். . ராமானுஜருக்கு தன் மீது இருந்த அபிமானத்தையும் பக்தியையும் புரிந்துகொண்ட நம்பெருமாள் ராமானுஜரின் திருமேனி தனக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவரது திருமேனியை கோயில் வசந்த மண்டபத்திலேயே திருப்பள்ளி படுத்த சொன்னார். இன்று அந்த இடத்தில்தான் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் சந்நிதி இருக்கிறது. அவர் திருப்பள்ளி படுத்தப்பட்ட இடத்தில் கந்தாடை ஆண்டான் சந்தனம் குங்குமப்பூ கொண்டு ராமானுஜர் திருமேனியை எழுந்தருள பண்ணினார். அது தத்ரூபமாக ராமானுஜர் மீண்டும் வந்திருப்பது போல் இருப்பதால் "தானான திருமேனி" என்று அது கொண்டாடப் படுகிறது.
ராமானுஜர்தனது வாழ்நாளில் பல அரிய பணிகளை செய்திருக்கிறார். வேதாந்தத்திற்கு விளக்கம் அளிக்கும் 9 நூல்களை எழுதினார். ஆழ்வார்களின் பாசுரங்களை பிரபலப்படுத்தினார். கோயில்களில் சீர்திருத்தங்களை செய்தார். முக்தி அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதி செய்தார். இறைவனின் திருவடிகளை பற்றியவர்கள் தங்களது எதிர்காலம் பற்றி அஞ்ச வேண்டாம் . பகவானுக்கும் அவரது பக்தர்களுக்கும் எப்போதும் கைங்கர்யம் செய்ய வேண்டும், ஆச்சார்யர்களுக்கும் நலிவடைந்தவர்களுக்கும் செய்யும் கைங்கர்யம் இறை பணிக்கு சமமானது என்று எளியோரும் புரிந்து கொள்ளும்படி உபதேசங்கள் செய்தார். 1017 ஆம் ஆண்டு பிறந்த ராமானுஜர் 1137 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் பிறந்து இந்த ஆண்டுடன் 1000 வருடங்கள் ஆகின்றன. 1000 ஆண்டுகள் ஆனாலும் அவரது உபதேசங்களும் தத்துவங்களும் இன்றைக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன. மக்கள் நலனையே அவர் முக்கியமாக கருதினார். சமத்துவத்தின் வடிவமாக அவர் இருந்தார். கடவுள் தனது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை உணர்த்தினார். 1000 ஆண்டு காணும் ராமானுஜரின் வழி நடத்தல் நமது மனித சமூகம் உயர்வடைவதற்கான வழி என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ராமானுஜர் பற்றி நான்கு பகுதிகளாக வந்த இந்த கட்டுரைகளில் ராமானுஜர் பற்றிய பல முக்கிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் அவருடன் சம்பத்தப்பட்ட பலர் பற்றி இடமின்மை காரணமாக எழுத முடியவில்லை. ராமானுஜர் என்கிற பெருங் கடலிலிருந்து சில துளி நீரை மட்டுமே அடியேன் எடுத்து காட்டியிருக்கிறேன்.
வாழி ராமானுஜர் வாழி எதிராசன்
-----------------------------
கூரத்தாழ்வான் ஒரு புத்தகம் முழுதும் மனனம் செய்து ராமானுஜருக்கு உதவியது பெரிய சாதனை ,வித்யாசமான திறமை.எல்லோருக்கும் முக்தி ,சமத்துவம் என்பது ராமானுஜரின் தாராள மனப்பான்மைக்கு
ReplyDeleteபெரிய எடுத்துக்காட்டு.மொத்தத்தில் என்னை ராமானுஜரோடு பயணிக்க வைத்தமைக்கு நன்றி.பணி தொடர வாழ்த்துக்கள்.சந்திரா.